ஹாஸ்டலுக்குள் இருந்த டெலிபோன் பூத்தில் நுழைந்த தோழியின் வீட்டு நம்பரை டயல் செய்தாள்,, நான்கைந்து ரிங் போனபிறகு எடுத்தாள் அவளின் தோழி “ மங்கை நான் ரஞ்சனா குரு வீட்டுக்கு போனியா? அவரை பார்த்தியா?” என்று கேட்க
எந்த பதிலும் இல்லாமல் எதிர்முனையில் அமைதி நிலவியது,,
ரஞ்சனாவுக்குள் ஒரு பதட்டம் நிலவ “ என்னாச்சு மங்கை,, எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்றாள் ரஞ்சனா