அன்று இரவு தூக்கம் வரவில்லை. கதையில் படித்த வரிகள் திருத்தமாக ஞாபகம் வந்தன.
ஒவ்வொரு வரியும் அழுத்தம் திருத்தமாக தெளிவாக ஞாபகத்திற்கு வந்தன. வர்ணனைகள், சூழ்நிலைகள், கதா பாத்திரங்கள் ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடந்து கொண்ட முறை எல்லாம் ஞாபகத்திற்கு வந்து என்னை இம்சித்தன.