மனசுக்குள் நீ – பாகம் 09 – மான்சி தொடர் கதைகள்

தனது தாயின் நினைவுகளில் மூழ்கியிருந்த சத்யன் அன்று இரவு தூங்க வெகு நேரமானது,, தன் தாயின் முகத்தில் இருந்த கருணையும் அன்பும் மான்சியின் முகத்திலும் இருப்பது போல் சத்யனுக்கு தோன்றியது,, அதனால்தான் அவளை முதலில் பார்த்தவுடனே பிடித்ததா? என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டான்

எது எப்படியோ மான்சி தான் காதலிக்கிறோம் என்பது சத்யனுக்கு உறுதியாக தெரிந்தது,, அவளின் சோகத்தை துடைத்து சொர்கத்தை காட்டவேண்டும் என்று தீர்மானித்தான்,, இனிமேல் மான்சி ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது என்று எண்ணினான்



அவனது தூக்கம் பழைய நினைவுகளால் பாதியும்,, மான்சியின் நினைவுகளால் பாதியுமாக பறிபோனது,, ஆனால் மான்சியை பற்றி நினைத்தாலே அவன் பாராசூட் இல்லாமல் விண்ணில் பறந்தது,, அவள் முகம் சத்யன் மனதில் ஆழப்பதிந்தது,,

இந்த நடு ராத்திரியில் அவளைப்பற்றி நான் நினைத்து தூக்கத்தை தொலைத்தது போல்,, அவளும் என்னை நினைப்பாளா,, என்று எண்ணி ஏங்கிய மனதை ‘ இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சில நாட்களில் அவளும் உனக்காக ஏங்கி தவிப்பாள், என்று அவன் மனம் ஜோசியம் சொன்னது,

மாலையில் ஆபிஸில் மான்சியை இழுத்து அணைத்தது அவனுக்கு நினைவு வந்தது,, உண்மையில் ஒரு பூச்செண்டை எடுத்து நெஞ்சில் சுமந்த உணர்வுதான் சத்யனுக்கு உண்டானது, அவள் உடல் எவ்வளவு மென்மை,, ஒரு பூவை கையாள்வது இருந்ததை நினைவு கூர்ந்தான் சத்யன்,, வெகுநேரம் வரை அவளின் வாசனை தன்மீது மிச்சமிருந்ததை இப்போதும் சத்யனால் உணரமுடிந்தது

அவள் கூந்தலை வருடிய விரல்களை முத்தமிட்டான்,, தனது நெஞ்சில் அவளுடைய இளமை பந்துகள் மென்மையாக அழுந்திய இடத்தை வருடிக்கொடுத்தான்,, தனது தோளில் அவளது தாடை அமிழ்ந்த இடத்தை தடவி பார்த்தான்,, இந்த ஒரு நாளில் தன்னிடம் ஏற்ப்பட்ட மாற்றங்களை நினைத்து சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது



ஒரே நாளில் மான்சிதான் எல்லாமும் என்று தான் ஆகிவிட்டதை சந்தோஷமாக உணர்ந்தான்,, காயம்பட்ட தனது இதயத்தை வருடும் மயிலிறகாக மான்சியை நினைத்தான்,, வரண்டுபோன தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தவளை எப்போது வாழ்க்கை துணையாக ஆக்கிக்கொள்வது என்று அவன் மனம் இப்போதிலிருந்தே ஏங்க ஆரம்பித்தது,,

ஆனால் அதற்க்கு முன் அவளின் சோகத்தை நிரந்தரமாக துடைக்கவேண்டும்,, இந்த இளம் வயதில் பெற்றோரை ஒரே சமயத்தில் இழந்த அவளிடம் ஏதாவது ஏடாகூடமாக கேட்டு அவள் மனதை புண்படுத்தி விடகூடாது,, ரொம்ப பொறுமையாக என் காதலை அவளிடம் சொல்லவேண்டும் , என்று சத்யன் திட்டம் தீட்டினாலும் தன்னால் பொறுமையாக இருக்கமுடியுமா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது

அதுவும் இவ்வளவு அருகாமையில் அவளை வைத்துக்கொண்டு,, எதுவுமே முகத்தில் காட்டாமல் இருப்பது ரொம்ப கஷ்டம் என்றுணர்ந்தான்,, இன்றே அவளை பார்த்து, அந்த அமைதியான அழகில் திகைத்து அடிக்கடி நின்றதும் ஞாபகம் வந்தது,, எதுஎப்படியோ இனி அவளில்லாமல் எனக்கு எதுவுமில்லை என்று உறுதியெடுத்தான்

See also  மனசுக்குள் நீ - பாகம் 37

அவளின் அருகில் நின்றபோது வந்த அந்த வாசனை, அது என்ன வாசனையாக இருக்கும் என்று ஞாபகத்தில் கொண்டு வரமுயன்றான்,, அந்த அற்புதமான வாசனை நிச்சயம் செயற்கையானது இல்லை,,



ம்ஹும் இன்னோரு முறை அவளை அணைத்தால் மட்டுமே அந்த வாசனையை கண்டுகொள்ள முடியும் என்று நினைத்தவன் தன்னை எண்ணி சிரித்தான்,, இன்னும் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல் இவ்வளவு கற்பனை செய்கிறோமே என்று வெட்கப்பட்டான்

மான்சியை நினைத்து அருகில் இருந்த தலையனையை அணைத்துக்கொண்டு அவளின் இன்பமான நினைவுகளை மனதில் அசைப்போட்ட படி அப்படியே தூங்கிப்போனான் சத்யன்,, …………………………

சத்யனின் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி,, குழம்பிய மனதுடனே பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்,, சத்யன் என்ன சொன்னான்,, ஏன் அப்படி பேசினான்

சத்யனின் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி,, குழம்பிய மனதுடனே பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்,, சத்யன் என்ன சொன்னான்,, ஏன் அப்படி பேசினான் என்ற குழப்பத்தை தவிர வேறு எதுவும் அவள் மனதில் இல்லை,

அவளுக்கு சத்யன் ஒரு முதலாளி என்று ஒரு போதும் நினைக்க முடியவில்லை,, கல்லூரி நாட்களில் அனிதா தன்னை பற்றி பேசியதைவிட தனது அண்ணனை பற்றி பேசியதுதான் அதிகம்,, ஹாஸ்டலில் இருவரும் ஒரே அறையில் தங்கியதாலும் அனிதாவின் நெருங்கிய தோழி என்பதால் குடும்பத்தில் நடப்பது அத்தனையும் மான்சியிடம் சொல்லிவிடுவாள்

அன்றாடம் சத்யனைப் பற்றி அனிதா பேசும் பேச்சை வைத்து சத்யனக்கு தன் மனதில் ஒரு உருவத்தைக் கொடுத்து அந்த உருவம் என்னவெல்லாம் செய்யும் என்று எத்தனையோ முறை மான்சி கற்பனை செய்து பார்த்திருக்கிறாள்



ஒருமுறைஅனிதா தனது அண்ணனின் புகைப்படத்தை காட்டி அவனை பற்றி பெருமையாக பேசியது இன்னும் நினைவிருக்கிறது,, சத்யனின் கோபம், வருத்தம், சந்தோஷம், அவனுக்கு பிடித்தது,, பிடிக்காதது, எல்லாமே மான்சிக்கு எத்துப்படியான விஷயங்கள் தான்,, அந்தளவுக்கு அனிதா அன்றாடம் அண்ணன் புராணம் பாடுவாள்,, மான்சி தூங்கினாள் கூட எழுப்பி அமர வைத்து அன்று அண்ணனுடன் பேசியதை அவளிடம் சொல்வாள்,,

முதலில் மான்சிக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் போகப்போக சத்யனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகியது,, அவனுக்கு ஒரு கஷ்டம் என்று அனிதா புலம்பினால், இவளும் சேர்ந்து கண்ணீர் வடிப்பாள்,, சத்யனுக்கு ஒரு சந்தோஷம் என்று அனிதா சொன்னால், அவனைவிட மான்சி அதிகமாக சந்தோஷப்படுவாள்

தாய் தந்தையின் மரணத்துக்கு பிறகு எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது என்று முடிவெடுத்தவள்,, சத்யனின் மில்லில் தான் வேலை,, ஒரு மாறுதலுக்காக வேலைக்கு போனால் மனசு நிம்மதியாக இருக்கும் என்று அனிதா தான் மான்சியின் சித்தப்பா, சித்தி, தாத்தா என அனைவரிடமும் அனுமதி வாங்கினாள்,, சத்யனின் மில் என்றதும் மான்சியிம் தயக்கமின்றி வந்தாள்

See also  மனசுக்குள் நீ - பாகம் 62 - இறுதி பாகம்

ஆனால் சத்யன் முதல் நாளே இப்படி நடந்துகொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை,, அவன் பார்வை ஆயிரம் கதைகள் சொன்னாலும் மான்சிக்கு மனதுக்குள் சத்யனிடம் நெருங்க பயமாகத்தான் இருந்தது,, அவனுடைய அந்தஸ்தும் வசதியும் அவளை பயமுறுத்தியது,, அவனுடைய கோபமும் பிடிவாதமும் பற்றி அனிதா நிறைய சொல்லியிருந்தபடியால் , அதுவும் மான்சியை பயமுறுத்தியது,,



மான்சி பல யோசனையுடன் பேருந்து நிறுத்தத்தில் நிற்க்க,, அவள் செல்லும் பேருந்து வந்தது,, கூட்ட நெரிசலில் தட்டுத்தடுமாறி ஏறி ஒரு ஓரமாக நின்று கொண்டாள்,, அவள் இறங்கும் இடம் வந்தது,, எந்த ஆணின் உடலும் உரசாமல் இறங்குவதற்குள் மான்சிக்கு கண்ணீரே வந்துவிட்டது

இந்த அவஸ்தை தனக்கு தேவை தானா என்று எண்ணியவாறு அவள் தங்கியிருக்கும் வீட்டுக்கு போனாள்,, வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கும் மாடிப்படிகளில் ஏறி தனது அறைக்கதவை திறந்து உள்ளே போனாள்,,

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks