மனசுக்குள் நீ – பாகம் 49

பிறகு எதையோ நினைத்துக்கொண்டு “ உன்னோட செல்போன்ல இருந்து அனிதாவுக்கு போன் பண்ணி கொடு அவகிட்ட பேசலாம்” என்றார்

மான்சி உடனே அனிதாவுக்கு போன் செய்து ரிங் போனதும் பாட்டியிடம் கொடுத்தாள்

மொபைலை வாங்கிய பாட்டி “ என்னம்மா அனிதா கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்டார்

“ ம் வந்துட்டோம் பாட்டி வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு,, என்ன பாட்டி இந்த நேரத்துல, அதுவும் இது மான்சியோட நம்பர் ஆச்சே,, மான்சி அங்கதான் இருக்காளா?, நல்லாருக்கா தானே?” என்று அனிதா சரமாறியாக கேள்விகளை கேட்க



பாட்டி பொருமையாக சத்யன் கூறியவற்றை எல்லாம் அனிதாவிடம் சொல்லிவிட்டு “ இதுதான் நடந்தது, இனிமே நான் சொல்றதை கவணமா கேளு அனிதா,, காலங்கார்த்தால கிளம்பி இங்க வா, வந்து உன் அண்ணன் கிட்ட, நீங்களும் மான்சியோட ஊருக்கு வர்றதா அனுமதி கேளு,நீ கேட்டா அவன் எதையும் மறுக்க மாட்டான்,, ஆனால் சாமர்த்தியமா கேட்கனும், மான்சி உனக்கு துணையா இருப்பா,, நான் மான்சிகிட்டயும் இதை பத்தி சொல்லிவைக்கிறேன், ஞாபகமா காலங்கார்த்தால வந்துரு அனிதா” என்று பாட்டி பேசப்பேச மான்சி திகைப்பில் வாய் பிளந்தாள்

இவ்வளவு சாமர்த்தியமாக செயல்படும் பாட்டி ஏன் இவ்வளவு நாளா சத்யனை பொற்றவருடன் சேர்க்கவில்லை, என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது

அனிதாவிடம் பேசிமுடித்து இணைப்பை துண்டித்து விட்டு மொபைலை மான்சியிடம் நீட்டிய “ என்ன மான்சி அப்படி பார்க்கிற?” என்று கேட்டார் பாட்டி

மான்சி தன் மனதில் தோன்றி கேள்வியை பாட்டியிடம் கேட்டேவிட்டாள்,

அவளை கூர்ந்து பார்த்த பாட்டி “ ஏன் மான்சி இத்தனை நாளா சத்யனை கெஞ்சமட்டுமே ஆள் இருந்தது,, இப்போ தானே கொஞ்சுறதுக்கும் ஆள் வந்துருக்கு, இனிமேல் எங்களோட கெஞ்சலும் உன்னோட கொஞ்சலும் சேர்ந்து எல்லாம் ஒட்டு மொத்தமா சத்யனை அசைக்கப் போகுது, என்ன மான்சி நான் சொல்றது புரியுதா ” என்று கேட்டார்

“ பாட்டி” என்று கூவிய மான்சி ஓடிச்சென்று பாட்டியை அணைத்துக்கொண்டாள்

அவளை விலக்கி நிறுத்தி மான்சியின் நெற்றியில் கைகளால் தடவி திருஷ்டி கழித்த பாட்டி “ மான்சி உன்னோட அழகுக்கும், ரஞ்சனாவோட அன்புக்கும் சத்யன் தன்னோட பிடிவாதத்தை விலைகொடுத்தே ஆகனும், அவனுக்கு வேற வழியில்லை,, நீ போய் படுத்து தூங்கு, காலையில சீக்கிரமா எழுந்திருக்கனும்” என்று கூறிவிட்டு பாட்டி படுக்கையில் சாய்ந்தார்

வயதானாலும் சமயோசிதமாக செயல்படும் பாட்டியை எண்ணி வியந்தபடி மான்சி அருகில் இருந்த பெரிய சோபாவில் படுத்துக்கொண்டாள்

See also  பொம்மலாட்டம் - பாகம் 08 - மான்சி தொடர் கதைகள்

மறுநாள் காலை அனிதா வந்துதான் அவளை எழுப்பினாள், எழுந்து அமர்ந்த மான்சியை இறுக்கி அணைத்துக்கொண்டாள் அனிதா..



“ ஏய் ஏய் விடுடி” என்று மான்சி அலற,, அவளை விடுவித்த அனிதா மான்சியின் கன்னத்தில் முத்தமிட்டு “ எங்க அண்ணிக்கு குட்மார்னிங்,, ஆனா பதிலுக்கு எனக்கு தரவேண்டிய முத்தத்தை எனது அண்ணணுக்கு வழங்குமாறு சிபாரிசு செய்கிறேன்” என்று அறிவித்தாள்

“ ஏய் அனிதா மெதுவா பேசுடி, பாட்டி இருக்காங்க ” என்று எச்சரிக்கை செய்ய

“ ம்ஹூம் பாட்டி எப்பவோ எழுந்து குளிச்சிட்டு பூஜை ரூம்ல இருக்காங்க,, நம்ம திட்டம் பலிக்கனும்னு வசுவும் அவங்களோட சேர்ந்து சாமி கும்பிடுறா, இப்போ மேடத்துக்காக தான் வெயிட்டிங், எழுந்து வர்றீங்களா, இல்லை என் அண்ணன் வந்து தூக்கிட்டுப் போய் பாத்ரூம்ல கொண்டு போய் விடனுமா?” என்று அனிதா இடுப்பில் கைவைத்தபடி கேட்க

“ அய்யய்யோ அவ்வளவு நேரமாச்சா” என்ற மான்சி வாரிச்சுருட்டிக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடினாள்

மான்சி குளித்துவிட்டு வெளியே வந்தபோது,, அங்கே அனிதா, வசந்தி, பாட்டி மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்,, காலை சூரியனின் வெளிச்சத்தை கடன் வாங்கி வந்தவள் போல பளிச்சென்று வந்து நின்ற மான்சியை பார்த்து மூவரும் வியந்து போனார்கள்

“ மான்சி சத்யன் இன்னும் எழுந்திரிக்கலை, நீ காபி எடுத்துட்டு போய் குடுத்து அவனை எழுப்பி எத்தனை மணிக்கு ஊருக்கு கிளம்புறதுன்னு கேளு” என்று பாட்டி உத்தரவிட..

சரியென்று தலையசைத்து விட்டு ராஜம்மா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு படியேறியவள் தயங்கி நின்று திரும்பி “ அனிதா வசு நீங்களும் கூட வாங்களேன்” என்றாள்

“ என்னது நாங்களா,, அண்ணன் ரூமுக்கா” என்று இருவரும் ஒரேசமயத்தில் ஆச்சரியமாக குரல்கொடுக்க,

பாட்டி அனிதாவின் தோளில் தட்டி “ ம் போங்க, எதுவும் சொல்லமாட்டான்” என்றார்

உடனே இருவரும் உற்சாகத்துடன் குதித்தபடி மான்சியுடன் சத்யன் அறைக்கு வந்தனர்,, அனிதாவும் வசுவும் அறையின் மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்தனர்

சத்யன் கட்டிலில் கவிழ்ந்து படுத்து, ஒருகாலை நீட்டி ஒரு கால மடித்து, மடித்த காலுக்கு அடியில் ஒரு தலையனையை வைத்து அதை மார்போடு அணைத்தபடி உறங்கினான்

அவன் தூங்கும் அழகை ரசித்தபடி சிறிதுநேரம் நின்ற மான்சி காபியை அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, அவன் முதுகில் மெதுவாக தட்டி “ ரொம்ப நேரமாச்சு எழுந்திரிங்க” என்றாள்



சத்யன் அசையாமல் படுத்திருந்தான்,, மான்சி மறுபடியும் அவன் தோளில் கைவைத்து சற்று பலமாக உலுக்க,, ஏற்கனவே விழித்துவிட்ட சத்யன் தன் தோளில் இருந்த மான்சியின் கையைப்பிடித்து வேகமாக முன்பக்கம் இழுக்க, மான்சி அப்படியே சரிந்து அவன் மேல் விழுந்து பக்கவாட்டில் சரிந்தாள் ,

See also  மான்சிக்காக - பாகம் 11 - மான்சி கதைகள்

அடுத்த நிமிடம் அவளை தன் காலால் சுற்றி வளைத்த சத்யன், அவள் சுதாரிப்பதற்குள் நெத்தியில் முத்தமிட்டு “ இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன், என் அம்மாவுக்கு பிறகு என்னை தூக்கத்தில் எழுப்பும் இரண்டாவது பெண் நீதான்,, இல்லேன்னா தினமும் என்னை இன்டர்காம் தான் அலறி எழுப்பும்” என்று கூறியவன் மறுபடியும் அவள் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்..

Leave a Comment

error: read more !!