அவன் அப்படி சொன்னது மணிக்கு அவன் மேல் ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது ஏதோ பிரச்சினைல இருக்கான் .ஆனா என்னனு சொல்ல பயப்புடுறான் சரி இன்னொரு நாள் கேப்போம் இப்ப கேட்க வேணாம் என்று நினைத்து கொண்டு சரி மச்சி நம்ம ஆஸ்பத்திரி போயி டேவிட் டிச்சார்ஜ் பண்ணி வீட்ல சேத்துட்டு போவோம் என்றான் மணி .
சரிடா என்றான் விக்கி .பின் ஆஸ்பத்திரி போயி டேவிட்டை டிஸ்சார்ஜ் பண்ணி விட்டு அவனை விக்கியின் காரில் ஏத்தி கொண்டு டேவிட் வீட்டில் போயி அவனை சேர்த்தார்கள் .
ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் டேவிட் .டேய் ஏன் பிரண்ட்ஸ்க குள்ள தேங்க்ஸ் எல்லாம் என்றான் மணி .ம்ம் கரெக்ட்டா என்றான் விக்கி .நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி காப்பி போட்டு கொண்டு வரேன் என்றாள்
ரெஜினா வேணாமா இருக்கட்டும் நீ ஆஸ்பத்திரில இருந்து டயார்ட் ஆகி இருப்ப நாங்க கிளம்புறோம் என்றான் மணி .ம்ம் ஆமாடா டேவ் நாங்க கிளம்புறோம் என்றான் விக்கி .டேய் இருங்கடா ஒரு காப்பி தான குடிச்சுட்டு போங்க என்றான் .அதுக்குள் ரெஜினா கிச்சனுக்குள் காப்பி போட போயி விட்டாள்
அப்புறம் நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க என்றான் டேவிட் ,ஒன்னும் இல்லடா ஆபிஸ்ல சில பிரச்னை அதான் என்றான் விக்கி .ஓகேடா எனக்கு உன்னையே பத்தி தெரியும் நீ இப்ப இங்க சொல்ல கூச்சப்படுவ நான் எனக்கு சரியானதுக்கு அப்புறம் ஒரு நாள் மீட் பண்ணி நிறைய பேசுவோம் இந்த அஞ்சு மாசம் பேச முடியாதத எல்லாம் பேசுவோம் என்றான் டேவிட் .ஓகேடா கண்டிப்பா என்றான் விக்கி .
அப்புறம் ஒரு வகைல எனக்கு இந்த ஆக்சிடன்ட் ஆனதுல நான் சந்தொசபடுறேன் என்றான் டேவிட் .ஏன்டா அப்படி சொல்ற என கேட்டான் விக்கி இப்படி ஆனதால தான நீயும் நானும் மறுபடியும் ஒன்னு சேர முடிஞ்சுச்சு மறுபடியும் பேச முடிஞ்சுச்சு .
இந்த அஞ்சு மாசம் உன் கிட்ட பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு நானா வந்து பேச நினைப்பேன் ஆனா என் ஈகோ என்னைய விடல ஆனா இப்ப கடவுளா நம்ம நட்ப மறுபடியும் ஒன்னு சேத்து வச்சு இருக்காரு என்றான் டேவிட் .
சரி எதுக்குடா பழச எல்லாம் பேசிகிட்டு நீ இப்பதைக்கு ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் நல்லா ரொம்ப நேரம் பேசிகிருவோம் என்றான் விக்கி ,ஓகே சுயர்டா என்றான் டேவிட் .பின் காப்பியை குடித்து விட்டு இருவரும் கிளம்பினார்கள் .பின் மணியை இறக்கி விட அவன் வீட்டிற்கு போனான் .வீட்டுக்கு வாடா என்றான் மணி .இல்ல மச்சான் இன்னொரு நாள் என்று விக்கி சொல்ல
அட வாடா வீடு வரைக்கும் நீ வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போன வள்ளி அப்புறம் உன் கிட்ட பேச மாட்டா என்று சொன்னான் .ஓகே வரேன் என்று மணி வீட்டிற்குள் போனான் .ஹ சிஸ் எப்படி இருக்க என்றான் விக்கி .
அவள் ஒரு கடுப்போடு நல்ல இல்ல என்றாள் ,இங்கயும் அப்படிதான் என்று விக்கி நினைத்து கொண்டு ஏன் என்ன ஆச்சு என்றான் விக்கி .ஒன்னும் இல்ல நீ எதுவும் சாப்பிடிரியா என்றாள் வள்ளி .
அது இருக்கட்டும் டேய் மணி வள்ளி ஏன்டா இப்படி இருக்கா என்ன ஆச்சுடா என்றான் விக்கி .அவளுக்கு என் மேல கோபம் அதான் இப்படி உம்முன்னு இருக்கா என்றான் மணி .
ஏண்டா நீ எதுவும் அவள திட்டினியாடா என்றான் விக்கி .திட்ட எல்லாம் செய்யலடா அவளுக்கு இப்ப 8 மாசம் ஆச்சு அதுனால ரொம்பவே பயப்படுறா அவங்க அப்பா அம்மாவ கூப்பிட்டு வர சொல்லி என்னைய ரயில் டிக்கெட் போட சொன்னா அது கேன்சல் ஆனா அதுக்கு நான் என்ன பண்ணுவேன் என்றான் மணி .
ஏண்டா கேன்சல் ஆச்சு என்றான் விக்கி .ஏண்டா நீ நியுஸ் எல்லாம் பாக்க மாட்டியா நம்ம ஸ்டேட்ல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தமிழ் நாடு முழுக்க வெள்ளத்துல மிதக்குது வீடே மிதக்குது ,இதுல எப்படி நம்ம ஊர்ல இருந்து ரயில் வரும் .
இப்ப என்ன அவங்க அப்பா அம்மா இல்லாட்டி நான் இல்லையா இவளுக்கு என்றான் மணி .உங்களுக்கு என்ன தெரியும் நீங்க ஆம்பிளக பொண்ணு இருந்து எங்கள மாதிரி நீங்களும் குழந்தைய சுமந்தா தெரியும் எங்க வலி கஷ்டம் வேதனை எல்லாம் .
அதுவும் எனக்கு முத பிரசவம் வேற உலகத்துல எல்லா பொன்னும் முத பிரசவத்துக்கு அம்மா பக்கத்துல இருக்கணும்னு தான் நினைப்பாங்க .என் பயம் உங்களுக்கு எப்படி தெரிய போகுது நீங்க எல்லாம் உடல் சந்தோசத்துக்கு விந்த செலுத்திட்டு போயிடுவிங்க நாங்க தான் சுமக்கிறது என்றாள் வள்ளி .
பாருடா இப்படி தான் எதாச்சும் பேசி என் கோபத்த கிளருடா நான் இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு கூட தான் சொன்னேன் இவ கேட்டாளா என்றான் மணி .