”மஞ்சுவா..?”
”ம்..அதுவும் இங்கதான் இருக்கா..?”
”எதுத்த ஏரியா.. ஏன்..?” குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
”அதக்கூட நீ.. ஓட்றயாமே..?” என்றாள்.
”ஏய்.. என்ன சொல்ற..? ஆமா இதெல்லாம் யாரு சொன்னா உனக்கு. .?”
”கேள்விப்பட்டேன்டா.. மாமு..” எனச் சிரித்தாள்.
சசிக்கு புரிந்தது.
இவளுக்கு புவி சொல்லியிருக்க வேண்டும்.. அவளுக்கு.. ராமு..!!
கவி மீண்டும் சன்னக்குரலில் கேட்டாள்.
”உன்ன பத்தி கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியலடா.. அந்த அண்ணாச்சியம்மா மேட்டர்லாம் செம ஷாக் எனக்கு..! ஓகே.. ஓகே.. கூல்.. டென்ஷனாகாத..விடு..! நான் போகட்டுமா..?”
”உனக்கு யாரு சொன்னா..?”
”புவிதான்டா சொன்னா..!” என எழுந்தாள் ” டேக் கேர்டா.. மாமு.. நா போறேன்..”
”எப்படி போவ..?”
”நடந்தே போயிருவேன்..!”
”சரி.. பாத்து போ..” என்றான்.
அவள் குமுதா மற்றும் குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டு போனாள்.
அவள் போனபின்பும்.. அவள் ஏற்படுத்திவிட்டுப்போன அதிர்வலைகள்.. அவனுக்குள் நீண்ட நேரம் நீடித்தது.
ராமு..புவி இருவர் மீதும்.. இருந்த அவனது வன்மம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.!!
இரண்டு நாள் கடந்திருந்தது. இருள் கவியும் நேரம்.. மெதுவாக எழுந்து மொட்டை மாடிக்குப் போனான் சசி.
லேசான பனிக்காற்று வீசிக்கொண்டிருந்தது.
கைகட்டி நின்றவாறு ரோட்டை வேடிக்கை பார்த்தான்.
அவன் எண்ணங்கள் மெல்ல.. மெல்ல பின்னோக்கி ஊர்ந்தது.
அண்ணாச்சியம்மாவின் நினைவுகளில் அவன் மனம் உழன்றுகொண்டிருந்தபோது..
சட்டென பவர்கட் ஆனது.
பவர் போனதும்.. ஊரெங்கும் இருளில் மூழ்கியது.
சிறிது நேரத்தில்.. இருதயா மேலே வந்தாள்.
”ஹாய்..” என்றாள்.
”ஹாய்..!” என அவனும் சொன்னான்.
”எப்ப வந்தீங்க.. மேல..?”
”கொஞ்ச நேரம்ஆச்சு..”
” என்ன பண்றீங்க.. இங்க..?”
”சும்மாதான் காத்து வாங்கிட்டு..”
”வேறெதும் வாங்கிடலையே..?” சிரித்தவாறு அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
”வேற என்ன..?”
”சிகரெட்….?”
சிரித்தான் ”இல்ல..!!”
”குட்பாய்..” என்றாள்.
”பவர்கட்டா..?”
”ஊரெல்லாம் இருட்டு…எப்ப வருமோ..”
”என்ன பண்ணிட்டிருந்த நீ..?”
”படிச்சிட்டுருந்தேன்.. பவர் போய்ருச்சு..உங்க வீட்டுக்கு போனேன். அக்கா சொன்னாங்க.. நீங்க இங்க இருப்பீங்கன்னு.. கால் வலிக்கலயா..?”
”லேசான வலிதான்.. பரவால்ல..இப்படி தனியா வந்து நின்னா.. நல்லாருக்கு..”
”அப்ப நா.. வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?”
”சே.. அதெல்லாம் இல்ல..” என்றான்.
சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள் இருதயா.
”கவிதா உங்களுக்கு க்ளோஸ் பிரெண்டா..?”
அவளைப் பார்த்தான்.
”ஏன்..?”
”வாடா.. போடானு பேசுச்சு..? அதான் கேட்டேன்..?”
”ம்.. அவ சின்ன வயசுலருந்தே அப்படித்தான்.! பழகிட்டா..”
”அவங்க யார லவ் பண்றாங்க..?” என்று கேட்டாள்.
”அதெப்படி.. இவ்ளோ தீர்மானமா கேக்ற..?”
” ஒரு யூகம்தான்.! லவ் பண்றாங்கதான..?”
”ம்..ம்ம்..!” லேசான புன்சிரிப்புடன் வானம் பார்த்தான். அங்கங்கே மின்னிக்கொண்டிருந்த ஒரு சில நட்சத்திரங்களைப் பார்த்தவாறு ”ஒரு கவிதை சொல்லேன் இருதயா..” என்றான்.
”இப்பவா..?”
”ம்..ம்ம்.! இந்த மாதிரி அமைதியான மனநிலைலதான் கவிதைகள ரசிக்க முடியும்..”
”ஓ.. இப்ப.. அமைதியான மனநிலைல இருக்கீங்களா.. நீங்க..?”
”ம்..ம்ம். .!”
”அதேமாதிரி.. கவிதை சொல்லவும் ஒரு அமைதியான மனநிலை வேனுமில்ல..?”
”ம்..ம்ம்.. யூ ஆர் ரைட்.. ஸோ..” என்று அவளைப் பார்த்தான்.
சிரித்தாள் ”உங்களுக்காக..” என்றாள்.
”ம்..ம்ம்.. சொல்லு.. மொதவே.. உன் மனசுல இருக்கும் இல்ல..?”
இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாள்.
”வானம் வெள்ளை..
மஞ்சள் நிலா..
நட்சத்திரப் பூக்கள்..!!”
அவள் சொன்ன வரிகளை உள்வாங்க முயன்றான் சசி.
”என்னாச்சு..?” என அவளே கேட்டாள்.
”ஏன்..?”
”எதுமே சொல்லல..?”
” அப்படி இல்ல.. நீ சொன்ன வரிகள் ரசணையா இருந்துச்சு.. ஆனா எனக்கு மீனிங் புரியல.. அதான் யோசிச்சிட்டிருந்தேன்..”
”ஓ..” சிரித்தாள் ”ஜஸ்ட் ரிலாக்ஸ்..!!”
”பட்.. நைஸ்..!! இதெல்லாம் எப்படி யோசிக்கற..?”
”தோணுது.. யோசிக்கறேன்..” என்று சிரித்தபடி அவனிடம் கேட்டாள் ”நீங்க ஒரு ஜோக் சொல்லுங்களேன்..”
”ஜோக்கா.. அப்படின்னா..?”
”ஜோக் தெரியாது..?”
”ஸாரி..”
”நீங்க வேஸ்ட்..” என்றாள்.
”யூ ஆர் ரைட்..!!” என்றான் சசி….!!!!