அதிக நேரம் உடலுறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்? | கேள்வி பதில்

நல்ல கேள்வி தான். ஆனால் இந்த கேள்வியைக் கேட்டது சகோதரரா? சகோதரியா? என்று தெரியவில்லையே.. ஆகவே இருபாலார் சார்பாகவும் பதில் கூறுகிறேன். (சகோதரருக்கும் சகோதரிக்கும் கீழே பதில் கூறப்பட்டுள்ளது)

சகோதரருக்கு..

ஆண்களைப் பொறுத்தவரையில் உச்சம் என்பது அவர்கள் விந்துவை வெளியாக்கும் நிலையாகும். சிலருக்கு விந்து முந்துதல் பிரச்சினை உள்ளது. அவர்களுக்கு உடலுறவு கொள்ள ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களிலேயே விரும்பியோ விரும்பாமலோ விந்து வெளியாகிவிடும். ஒரு சிலரே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நீண்ட நேரம் உறவில் ஈடுபடுகிறார்கள்.

நீங்கள் உங்கள் துணைவியை திருப்திப்படுத்த நினைக்கிறீர்கள் அல்லது உறவில் அதிக நேரம் இன்பத்தில் திளைக்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பெண் உச்சமடையும் நிலையை அடைய உடலும் மனதும் ஒத்துப்போகும் வகையில் கணவர் அவளுடன் சற்று அதிக நேரம் உறவு கொள்ள வேண்டும். உடலுறவு வேட்கைகள் ஒவ்வொரு பெண்ணுக்கிடையில் வித்தியாசப்படும். சில பெண்கள் தனது கணவர் மெதுவான வேகத்தில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டுமென நினைப்பார்கள்.



சிலர் வேகமாகவும் பலமாகவும் உறவு கொள்ள வேண்டுமென நினைப்பார்கள். சிலர் ஒரு முறை உச்சம் அடைந்தால் போதும் என நினைப்பார்கள். பலர் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட உச்சங்களை அடைய வேண்டுமென நினைப்பார்கள். இதில் உங்களின் துணைவி எந்த வகை என நீங்கள் தான் பார்க்க வேண்டும்.

நான் வேண்டுமானால் பெரும்பாலான வகைக்கு பதில் கூறலாம். நீங்கள் உடலுறவில் மாத்திரம் உங்கள் முழு கவனத்தை செலுத்தாமல் துணைவியை காதல் முறையில் திருப்திப்படுத்தும் வேறு முறைகளையும் கையாள வேண்டும். முக்கியமாக அவரின் கண்களை விடாமல் அன்பாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். மனதிலிருக்கும் காதலை முழுமையாக வெளிப்படுத்துவது கண்கள் மட்டுமே. அதில் அவர்களுக்கு பூரண நம்பிக்கை உண்டாகும். உடலுறவுக்கு முன்பாக முன் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு செய்கைகளிலும் தன் கணவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பை அவர்களுக்கு உண்டாக்க வேண்டும். முன் விளையாட்டின் போது, துணைவியாரின் உடல் பாகங்களை தடவுதல், மசாஜ் செய்தல், முத்தம் கொடுத்தல், நாக்கால் வருடுதல், சுவைத்தல் என மெதுவாக காய் நகர்த்த வேண்டும். முக்கியமாக காதுமடல், கழுத்துப்பகுதி, மார்புப்பகுதி, அடிவயிறு, தொடை, முதுகுப்புறம், பிட்டங்கள் மற்றும் கடைசியாக பெண்ணுறுப்பு என எல்லா உணர்ச்சிமிக்க உறுப்புகளையும் சுவைத்து தூண்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பெண்ணுறுப்பின் உட்பகுதி சுரப்பினால் நனைக்கப்பட்டு வலியில்லாத உறவுக்கு தயாராகிவிடும். மேலும், அவர்களின் பெண்ணுறுப்பினுள் விரலை விட்டு தேய்த்துக் கொண்டே கிளிட்டோரிசை நாவினால் தீண்ட வேண்டும். இதனால் அவர்கள் உடலுறவுக்கு முன்பே போதியளவு உச்சத்தை அடைந்து கொள்வார்கள்.



பின்பு, உங்கள் துணைவிக்கு விருப்பமிருந்தால் மட்டும் உங்களின் ஆண்குறியை அவரிடம் கொடுத்து நன்றாக சுவைக்க சொல்லுங்கள். சிறிது நேரம் வாயினால் உறிஞ்சுமாறு சொல்லுங்கள். இப்படி செய்வதால் உங்களின் ஆண்குறி போதியளவு விறைப்பைப் பெற்று உறுதியாகிவிடும். விந்தை வெளியாக்க உணர்வு ஏற்பட்டால் உடனே சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு உங்கள் துணைவியாருடன் உறவு கொள்ளுங்கள். அதன் இன்பத்தில் முழுமையாக இறங்குங்கள்.

See also  ஆண்குறியை பெரிதாக்கும் வழிகள் - செக்ஸ் டிப்ஸ்

உங்களை விட உங்களின் துணைவியை திருப்திப்படுத்த முயலுங்கள். அவரின் திருப்தியைக் கொண்டு நீங்களும் திருப்தி பெறுங்கள். அவருக்கு ஏற்றதான வகையில் உறவு கொள்ளுங்கள். இடைக்கிடையில் அவர் உங்கள் மேலிருக்குமாறான பொசிசன்களை கையாளுங்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு போதும் என்ற நிலை வந்த பின்பு நீங்களும் உச்சம் அடைந்து உறவை நிறைவு செய்து கொள்ளுங்கள். உறவு முடிந்த உடனேயே தூங்கிவிடாமல் இருவரும் கட்டிபிடித்தல், முத்தமிடுதல், தடவுதல், ஆசுவாசப்படுத்திக் கொள்ளல், பேசுதல் போன்ற பின்விளையாட்டுக்களிலும் ஈடுபடுங்கள். இது மனதளவிலும் உடலளவிலும் உங்களுக்கு போதிய திருப்தியை தரும்.

தினமும் போதியளவு உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா மற்றும் சத்துள்ள உணவு வகைகளை பழக்கத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக முருங்கை, கீரை வகைகள், பழவகைகள், சிறுதானியங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, சின்ன வெங்காயம் போன்றவை. அவ்வப்போது உங்கள் துணைவியுடன் சற்று நெருக்கமாக இருக்க முயற்சியுங்கள். உங்கள் தேவைக்கு அதிகமாக அவர் மேல் காதல் வையுங்கள். இதுவே உங்களிருவரின் குடும்ப வாழ்க்கைக்கும், நீண்ட நேர உறவிற்கும் வழிவகுக்கும்.

சகோதரிக்கு..

இந்த விடயத்தை பொருத்தமட்டில் ஆண்களிலும் வகைகள் உண்டு. சிலர் உறவில் தங்கள் தேவைக்காக மட்டும் மனைவியைத் தூண்டி அந்த தேவையை விரைவாக முடித்துக் கொண்டு தூங்கிவிடுவார்கள். இவர்களுக்கு மனைவியின் தேவை பெரிதாக இருக்காது. சில ஆண்கள் உடலுறவு வேட்கை அதிகம் கொண்டவர்களாகவும் அவ்வப்போது அதில் நீண்ட நேரம் ஈடுபட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இதில் எல்லாப் பெண்களுமே ஒத்துப்போக முடியாது. சில பெண்கள் காலப்போக்கில் இவ்வாறான அடிக்கடி மற்றும் நீண்ட நேர உடலுறவுகளுக்கு பழக்கப்பட்டு விடுவார்கள். சிலர் கணவரின் ஆசைக்காக மாத்திரம் இணங்குவார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் உடலுறவில் சிறிது நாட்டமுள்ள பெண்களைக் கூட அதற்கு அடிமையாக்கி விடுவார்கள்.



சாதாரணமாக நம்மை போன்ற பெண்களுக்கு ஆண்களை உடலுறவுக்கு அழைக்க பல யுத்தி கையாளும் வசதிகள் உள்ளன. இதற்கு ஆண்களிடம் காணப்படும் சபலமும் பெண்களிடம் காணப்படும் கவர்ச்சியுமே காரணம். பொதுவான பெண்கள் தங்கள் கணவர்களை உறவிற்கு அழைக்க விரும்பினால், அதற்கு முன் அவர்கள் கணவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வார்கள். அவருக்கு விரும்பிய உணவுகளை சமைத்து கொடுப்பது, அவருக்கு பிடித்த கவர்ச்சியான உடைகளை அணிந்து அலங்கரித்துக் கொள்வது, ஆசையாகப் பார்ப்பது, பேசுவது, தொடுவது, முத்தமிடுவது, கவர்ச்சியைக் காண்பிப்பது என எல்லா முயற்சிகளிலும் இறங்குவார்கள். பெண்களிடம் நாண உணர்வு இருப்பதால் நேரடியாக தங்களின் ஆசையை வெளிப்படுத்த நினைக்க மாட்டார்கள். அதற்கும் இணக்கம் தெரிவிக்காத ஆண்களை கூட அவர்களின் ஆண்குறியை சுவைப்பதன் மூலமாக தூண்ட முடியும். பெரும்பாலும் உடலுறவை ஆரம்பித்து வைப்பதிலும், அதை பூர்த்தி செய்வதிலும் ஆண்களின் பங்கே அதிகமாக உள்ளது. அவர்களின் ஆர்வம் இல்லாவிடின் உடலுறவில் பூரண திருப்தி பெறுவது கடினம்.

See also  ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்

கணவரை தன்னுடன் நீண்ட நேரம் உறவில் ஈடுபட வைக்க நிறைய வழிகள் உள்ளன. முதலில், கணவருக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவர் வெளியில் சென்று வீடு திரும்பும் போது அவரிடம் வீடு மற்றும் பிள்ளைகளின் பிரச்சினைகளை பற்றி உடனே சொல்லாமல் அவர் மீது அன்பைப் பொழிய வேண்டும். அவருக்காக விரும்பிய உணவுகளை சமைத்து அன்புடன் பரிமாற வேண்டும். களைப்புடன் வரும் அவருக்கு புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும். அருகில் யாரும் இல்லாத போது அவருடன் அதிகளவு நெருக்கத்தை கையாள வேண்டும். தினமும் இருவரும் ஒன்றாக குளித்தல் அல்லது அவரைக் குளிப்பாட்டுதல், இலட்சணமாக இருத்தல், உடலைப் பேணுதல், சுத்தமாகவும் வாசனையாகவும் இருத்தல் மற்றும் காமக்குரலில் பேசுதல் போன்றவை. இவையெல்லாம் தானாகவே அவரை உடலுறவுக்குத் தூண்டும்.



வீட்டில் பிள்ளைகள் உட்பட வேறு யாரும் பார்த்திராமல், ஒரு சிறு ஓசை கூட வெளியே கேட்டிராத வகையில் படுக்கையறையை அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இரவில் எல்லோரும் தூங்கிய பின்னர் அல்லது அதிகாலையில் உடலுறவுக்கு செல்வது நல்லது. அப்போது தான் யாருடைய இடையூறும் இல்லாமல் நிம்மதியாகவும் திருப்தியாகவும் அதில் ஈடுபட முடியும். உடலுறவின் போது கணவரின் செய்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் தடை போடக்கூடாது. அவர் தனக்கு செய்யும் எல்லாவற்றையும் மனைவி அனுபவிக்க வேண்டும். போதியளவு திருப்தி காண முயற்சிக்க வேண்டும். தேவைப்பட்டால் கணவரின் ஆண்குறியை சுவைக்க வேண்டும். உடலுறவில் முனகல் மற்றும் சிணுங்கல் ஓசைகளை எழுப்பி கணவரை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர ஏனைய எல்லா நேரங்களிலும் கணவரின் உடலுறவு அழைப்பிற்கு மனைவி பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும். இப்படி நடந்து கொள்வதால் கணவரை நீண்ட நேரம் தன்னுடன் உறவு கொள்ளச் செய்யமுடியும்.

இருவருக்கும்..

திருமண வாழ்க்கையின் முக்கிய அங்கம் உடலுறவு. தேவைப்படும் போது அதை ஒருவருக்கொருவர் கொடுப்பதும் பெற்றுக்கொள்வதும் தான் உண்மையான தாம்பத்திய வாழ்க்கை. ஒவ்வொருவரும் தன் திருப்தியை விட தனது துணைவரின் திருப்தியை மேலாக நினைப்பதன் மூலமாகவே அந்த உறவில் நீண்ட நேரம் நிலைக்கும் வாய்ப்புக் கிடைக்கும். அன்பையும் காதலையும் காமத்தை விட அதிகமாக வைத்துக் கொள்வதே குடும்ப வாழ்க்கை சிறக்க சிறந்த வழியாகும். இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணம். நன்றி.

error: read more !!