அப்படி இல்லடா அத எப்படி சொல்றது சரி நமக்குள்ள என்ன சரி இப்ப வள்ளி ஆரம்பத்துல என்ன திட்டுனா என்றான் டேவிட் .அவ நிறய திட்டுனா அதலாம் ஞாபகம் இல்ல என்றான் .அது வந்து அவ மணிய டேய் மணி நாசமா போறேவேனே எல்லாம் உன்னால தாண்டா என்னால வலி தாங்க முடியலடா இப்ப அப்படின்னு திட்டுனா அத உன்னால புரிஞ்சுக்க முடியாதா என்றான் .
இல்ல புரியல என்றான் விக்கி .இதுக்கு தான் சும்மா போட்டு கிட்டே மட்டும் இருக்காம சீக்கிரம் கல்யாணம் பண்ணுனும் கிறது என்றான் ,சரி அத விடு என்றான் விக்கி .டேய் இப்ப வள்ளி ஏன் கத்துரான்னா அவ பிரசவ வலிக்கு யார் காரணம் என கேட்டான் ,அவ கர்ப்பம் என்றான் விக்கி .ஐயோ மர மண்டை சரி கிட்ட வா நாம தான் மும்பைல தான இருக்கோம் அதுனால அவலவா எவனுக்கும் தமிழ் தெரியாது நீ வா என்றான் .
டேய் அவ கற்பத்துக்கு காரணம் நம்ம மணி தான என்றான் டேவிட் ,ஆமா என்றான் விக்கி.அதான் அவன திட்டுறா புரிஞ்சுச்சா என்றான் டேவிட் .ம்ம் புரிஞ்சுச்சு என்றான் .உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன் என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போது வள்ளி கத்துவதை கேட்ட விக்கி மச்சி அவ கத்துறது ஒரு மாதிரி இருக்கு வெளியே போயி ஒரு தம் போடுவோமா என்றான் விக்கி .
நானும் அத தான் நினைச்சேன் என்று டேவிட் சொன்னான் .இருவரும் வெளியே போனார்கள் .பின் இருவரும் சிகெரெட் அடித்து கொண்டே இருக்கும் போது மச்சி இந்த பிரசவத்த வச்சு நிறய A ஜோக் இருக்கு அது மூலமா உனக்கு புரிய வைக்கேறேன் என்றான் டேவிட் .சரி சொல்லு என்றான் விக்கி ,ஒரு தடவ ஒரு பொண்ணு பிரசவ வலில டேய் குமரேசா நாயே எல்லாம் உன்னால தாண்டா எல்லாம் இப்படின்னு கத்துச்சாம் அப்ப அத பாத்து புருஷன் ஷாக் ஆனானம் .
அதுக்கு டாக்டர் சொன்னன்கலாம் நீங்க ஒன்னும் பெருசா எடுத்துகாதிங்க பிரசவ வலில பொண்ணுக எப்பயுமே புருஷன திட்டுறது வழக்கம் ஏன்னா நீங்க தானே இதுக்கு காரணம் அப்படின்னு சொன்னங்க்லாம் .அதுக்கு புருஷன் சொன்னானாம் இல்ல டாக்டர் என் பேரு ராஜேந்திரன் என் பக்கத்து வீட்டுக் காரன் பேரு தான் குமேரேசன் அதுக்கு தான் இப்ப ஷாக் ஆனேன்னு சொன்னாம் எப்படி இருக்கு பாரு என்று சொல்லி டேவிட் சிரிக்க விக்கியும் சிரித்தான் .
அதாண்டா இந்த பிரசவ வலில இவளுக யார திட்டுராளுகளோ அத வச்சே நம்ம தெரிஞ்சுக்கலாம் குழந்தை யாரோடதுன்னு என்றான் டேவிட் ,நிஜமாவேவா டா என்றான் விக்கி .சில பேர் கத்துவாலுக சில பேர் இதுலயும் கமுக்கமா இருந்துருவாலுக என்றான் .அப்போது விக்கிக்கு அவன் மனதில் ஒரு காட்சி இல்லை இரண்டு விதமான காட்சிகள் ஓடியது .
ஒன்று டேய் விக்கி படு பாவி உன்னால தாண்டா இதலாம் உனக்கு எல்லாம் காண்டம்னா என்னனே தெரியாதா இப்ப எனக்கு வலி உயிர் போகுதே என்று சுவாதி ஒரு காட்சியில் அப்படி கத்த
இன்னொரு காட்சியில் ஐயோ டேவிட் இது உன் குழந்தை நான் தெரியா தனமா பாவப்பட்ட விக்கிய ஏமாத்திட்டேன் என்று இன்னொரு காட்சியில் அவள் கத்துவதும் போல அவன் மன காட்சியில் ஓட
எதுவா இருந்தாலும் சரி முத இது நடந்தாலும் சரி இல்ல ரெண்டாவது இது நடந்தா அவள நல்லா அசிங்கமா திட்டிட்டு நம்ம பழைய மாதிரி ஆக வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு இருந்தான் .
டேய் விக்கி விக்கி மணி மாமனார் கூப்பிடுராரு என்று சொன்ன பின் தான் விக்கி நார்மல் ஆனான் .பின் இருவரும் போக அவர் சந்தோசத்தோடு எனக்கு பேத்தி பிறந்து இருக்கு தம்பி என்றார் .ரொம்ப சந்தோசம் சார் தாய் சேய் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா என கேட்டான் டேவிட் ,ம்ம் நல்லா இருக்காங்க தம்பி என்றார் .நாங்க பாக்க போலாமா என கேட்டான் டேவிட் .ம்ம் தாரளாமா போயி பாருங்க தம்பி என்றார் .
வாடா போவோம் என்று விக்கியை இழுத்து கொண்டு உள்ளே போனான் .விக்கி சரியாக அந்த ரூம் வருவதற்கு முன் டேவிட் காதில் மட்டும் கிசுகிசுத்தான் .டேய் நீ மட்டும் போயி பாத்துட்டா வா என்றான் விக்கி .ஏன்டா நீயும் வாடா என்றான் .இல்லடா எனக்கு எப்பயுமே குழந்தைகள பாக்க பயம் ஒரு மாதிரி இருக்கும் எங்க அக்கா குழந்தையாவே நான் 6 மாசம் கழிச்சு தான் பாத்தேன் இது வேற பிறந்த குழந்தையா அதுனால ரொம்ப பயமா இருக்கு என்றான் .
அப்ப நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தாலும் பாக்க போ மாட்டியா என்றான் டேவிட் .எனக்கு தான் கல்யாணமே ஆகலையே என்றான் விக்கி .ஆனதுக்கு அப்புறம் என்றான் டேவிட் .அது அப்ப பாப்போம் என்றான் விக்கி .சரி அத அப்ப பாரு இத இப்ப பாரு என்று சொல்லி கொண்டே அவனை உள்ளே இழுத்து சென்றான் .