ஓகே சுய்ர்ங்க தேங்க்ஸ் என்றாள் பின் விக்கி ஒரு அலுப்போடு ரிஸ்பசென் போயி உக்காந்தான் .அங்கு ரிசப்சனில் இருந்த டிவியை பார்த்து கொண்டு இருந்தான் .தீடிரென சுவாதி ஞாபகம் வரவும் விக்கி அவளுக்கு போன் அடித்தான் .
ஹே ஹலோ என்ன இன்னும் நீ வர காணோம் என்ன பார்டியா இல்ல எதுவும் பொண்ணு கூட இருக்கியா என்றாள் .உண்மைய இவ கிட்ட சொல்லுவோமா வேணாம் என்று நினைத்து கொண்டு பார்டி இல்ல தீடிருன்னு பாஸ் கூட நான் மட்டும் ஒரு வொர்க் விசயமா டெல்லி வரைக்கும் வர வேண்டியாதா போச்சு
முன்னாடியே சொல்லி இருப்பேன் பட் பிளைட்ல போயிகிட்டு இருந்ததால போன் பேச முடியல சோ இன்னைக்கு ஒரு நாள் நைட் உங்க அந்த அஞ்சலி அக்காவ வர சொல்லிக்கிரியா என்றான் .ஒ சுயர் நான் அவங்கள வர சொல்லி கூட இருந்துக்கிறேன் நீ எப்ப வருவ என்றாள் .
எனக்கும் உன்னையே இப்பயே வந்து பாக்கணும் போல இருக்கு ஆனா விதி நம்மள கடைசி வரைக்கும் ஒன்னு சேர விடாது போல என்று நினைத்து கொண்டு
நான் வழக்கம் போல சாய்ங்காலம் வந்துருவேன் நீ மட்டும் பாத்து பத்திரமா இரு என்றான் .என்ன தீடிருன்னு அக்கறை என்று சுவாதி கேட்க அது வந்து வந்து என்று விக்கி திணறினான் .போதும்டா எனக்கு எல்லாம் தெரியும் என்றாள் .ஐ இவளுக்கு தெரிஞ்சுடுச்சா புரிஞ்சுச்டுச்சா என் லவ் என்று விக்கி நினைத்து கொண்டான்
நீ எதுக்கு என் மேல அக்கறை காட்டேறேன்னு தெரியும் .எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அஞ்சலி அக்கா உன்னையே போலீஸ்ல மாட்டி விட்டுருவாங்க அத நினைச்சு தான பயப்படுற என்றாள் .எஸ் ஆமா கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே என்றான் .டேய் சும்மா அத நினைச்சு நீ எனக்காகக பயந்து கிட்டு இருக்காத நீ நீ பாட்டுக்கு இரு சரியா என்றாள் .ம்ம் சரி என்றான் ,சரி நான் வைக்கிறேன் என்றாள் .
அவள் போனை வைத்த பின் அவன் டேவிட்டை பற்றி நினைத்து பார்த்தான் .பல மாதங்களுக்கு பிறகு டேவிட் கூட பேசியது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .
உள்ளே அவனும் டேவிட்டும் பேசியது ஞாபகத்திற்கு வந்தது .சே டேவிட் நம்ம மேல இன்னும் பாசமும் மரியாதையும் வச்சு இருக்கான் .அத வெட்டியா கெடுத்துக்க வேண்டாம் .ம்ம் நமக்கும் லவ்வுக்கும் சுத்தமா ராசி இல்ல இனி சுவாதிய மறந்துட்டு வழக்கம் போல வேலைய பாப்போம் என்று நினைத்து கொண்டு தூங்கினான் .
பின் காலையில் எழுந்து அவர்களுக்கு காப்பி வாங்கி கொண்டு ரூமிற்குள் போனான் .ஹ குட் மார்னிங்டா நைட் முழுக்க இங்கயே இருந்ததா ரெஜினா சொன்னா எதுக்குடா வீட்டுக்கு போயிருக்கலாம்ல என்றான் டேவிட் .
டேய் அந்த பிள்ள பாவம் மும்பைக்கு புதுசு உனக்கு நைட் எதாச்சும்னா அது மட்டும் தனியா சமாளிக்குமா அதான் நானும் கூடவெ இருந்தேன் என்றான் .தேங்க்ஸ்டா நீ வேணும்னா ஆபிஸ் போறதுக்கு வீட்ல போயி பிரஸ் ஆப் ஆகிட்டு கிளம்பு
ரெஜினா சமாளிச்சுகிடுவா என்றான் டேவிட் .இருக்கட்டும்டா நான் ஆபிஸ்ல சொல்லிகிறேன் வர லேட் ஆகும்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டே போறேன் என்றான் .
இருக்கட்டும்டா என்று டேவிட் சொல்ல டேய் இட்ஸ் ஓகே என்றான் விக்கி .அவர்களுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்து விட்டு சிறிது நேரம் அவர்களோடு இருந்தான் .பின் மணி வந்தான் .டாக்டர் என்ன சொன்னார் எல்லாம் நார்மல் தானே என்றான் .ம்ம் எல்லாம் நார்மல் தான் சாய்ங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காரு என்றான் .
ஓகே வா ஆபிஸ் போவோம் என்றான் மணி .இல்ல டேவிட் என்று விக்கி சொல்ல இல்லடா அவன ரெஜினா பாத்துகிரட்டும் நமக்கு காலைல ஒரு ரிவியுவ் மீட்டிங் பாஸ்கிட்ட இருக்கு கண்டிப்பா அதுல நீ இருக்கணும் அதனால வா நம்ம போயிட்டு சாய்ங்காலம் வருவோம் என்றான் மணி .
விக்கி டேவிட்டை பார்க்க நீ போடா நாங்க சமாளிசுகிருவோம் என்றான் டேவிட் .
ஓகே பாத்து இருடா எதாச்சும்னா போன் போடுங்க உடனே வந்துறோம் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியே போனார்கள் .
பின் வெளியே விக்கியும் மணியும் காரில் ஏறினார்கள் .மச்சி உன் கார்ல நேத்து நிறைய பிளவர்ஸ் இருந்துச்சு என்ன விசயம்டா புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க எதுவும் பொண்ணு லவ்வுன்னு விழுந்துட்டியா என்றான் மணி .மணி சொன்ன பிறகு அந்த பிளவர்ஸ் எல்லாம் பார்த்தான் .
அது வாடி போயி இருந்தது ,கிட்டத்தட்ட விக்கியும் அதே நிலையில் தான் இருந்தான் .பின் மணியிடம் கேட்டான் .என்ன மச்சான் கேட்ட என்றான் .இல்ல பிளவர்ஸ் வாங்கி இருக்கியே என்ன மேட்டர் என்றான் .
அதான் மேட்டர் தான் ஒரு பொண்ண மேட்டர் பண்றதுக்குகாக பிளவர்ஸ் வாங்கிட்டு போனேன் அதுக்குள்ளே நீ போன் போட்டியா அதான் இங்க வந்துட்டேன் என்றான் .
நீ திருந்தவே மாட்டியாடா என்றான் மணி .எதுக்கு திருந்தனும் ஏன் திருந்தனும் என்று பொய்யாக சிரித்து விட்டு ஒரு நிமிஷம் அந்த பிளவர்ஸ் வச்சு இனி எந்த யூஸ்ம் இல்ல அதுனால அத குப்ப தொட்டில போட்டுட்டு வரேன் .
அப்படியே மழை காலமா ஒன்னுக்கு ரொம்ப அர்ஜெண்டா இருக்கு டாய்லெட் போயிட்டு வரேன் என்று சொல்லி கொண்டு அந்த பிளவர்ஸ் எடுத்து கொண்டு போயி ஒரு குப்பை தொட்டி முன் நின்றான் .
கடைசியாக அதை ஒரு ஏக்கத்தோடு பார்த்து விட்டு மெல்ல அதை குப்பை தொட்டியில் போட்டான் .பின் டாய்லெட் போயி உக்காந்து குழாயை திறந்து விட்டு சிறிது நேரம் அழுதான் .ஏண்டா உனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை வருது இப்ப பிரண்டா இல்ல லவ்வரா நான் என்ன பண்ணுவேன் என்று அழுதான் .