எங்க.. என்னை நேரா பாத்து சொல்லு…”
அவன் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள்.
”நா ஒருத்தன லவ் பண்றேன் போதுமா..? லீவ் மீ..ஓகே..?” என அவள் திடமாகச் சொல்ல..
இடிவிழுந்தது போலானான் சசி. காற்று போன பலூனாக.. அப்படியே தரையில் துவண்டு உட்கார்ந்தான். அவனது முகத்தில் ரத்தம் சுண்டிப்போனது..!
புவியாழினி ”எந்திரி..” என்றாள்.
”புவி.. ஆர் யூ.. ஷ்யூர்..” அவன் திணறலாகக்கேட்க..
தன் தலைமீது கை வைத்தாள்.
”போதுமா..?”
அவனது சப்த நாடியும் ஒடுங்கிப்போனது.
ரத்தம் சுண்டிய முகத்துடன் அப்படியே உட்கார்ந்து விட்டான் சசி.
அவன் தோளில் கை வைத்து எழுந்து எதுவும் பேசாமல்.. வெளியே போனாள் புவியாழினி.!
அதற்குமேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. புவியாழினி இப்படி ஒரு குண்டைத் தூக்கி அவன் இதயத்தில் போடுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.
மனதைத் தேற்றிக்கொண்டு.. நீண்ட ஒரு பெருமூச்சுடன் எழுந்து.. அவனும் வெளியே போனான்.
புவி பாத்ரூமில் இருந்தாள்.
வீட்டுக்குள் போய்.. கண்ணாடி பார்த்து தலைவாரின சசி லேசாக துணுக்குற்றான்.
அவன் கன்னத்தில் சின்னதாக ஒரு காயம் தெண்பட்டது.
அதைத் தொட்டுப் பார்த்தான்.. நகக்கீறல்..! எப்படி..?
‘ஓ.. புவியை முத்தமிட்டபோது.. கன்னத்தில் கிள்ளினாளே..!’ அவன் உதட்டில் புன்னகை அரும்பியது. அதநேரம் சட்டென மனதில் ஒரு பயம் வநதது.
‘அவள் அம்மாவிடம் ஏதாவது சொல்லி விடுவாளோ..? சே.. அப்படி செய்யமாட்டாள்..’
தலைவாரி உடைமாற்றி.. அவன் வெளியே போனபோது புவியாழினி வீட்டில் பூட்டு தொங்கியது.
பாத்ரூமில் பார்த்தான். அங்கும் இல்லை.
‘எங்கே போனாள்..?’
வீட்டைப் பூட்டி சைக்கிளை எடுத்தான. வீதியில் போய் நின்று இரண்டு பக்கமும் பார்த்தான்.! புவி எங்கும் தெண்படவில்லை..!!
தையல்கடை முன் சைக்கிளை நிறுத்தினான் சசி. மளிகைக்கடையைப் பார்த்தான்.
அண்ணாச்சியம்மா அவனை முறைத்துப் பார்த்தாள். அவளை நேரடியாகப் பார்க்க முடியாமல்.. லேசான புன்னகை காட்டிவிட்டு.. ராமுவின் கடைக்குள் போய் புகுந்து கொண்டான்.
”டீ சொல்றா..” என்றான் ராமுவிடம்.
ராமு ”என்னடா.. வந்ததும் டீ கேக்ற..?” என லேசான வியப்புடன் கேட்டான்.
”குடிக்கனும் போலருக்குடா.. சொல்லு..” சேரில் உட்கார்ந்தான்.
ராமு எழுந்து போய்.. டீயும் சிகரெட்டும் வாங்கி வந்தான்.
டீ குடித்தபடி..
”அண்ணாச்சியம்மா தனியாருக்கு..” என்றான் ராமு.
”ம்..ம்ம்.. பாத்தேன்..”
”போகலையா..?”
”போலாம்..!” அந்தப் பேச்சை மாற்ற விரும்பினான் சசி ”ஆமா மஞ்சுவ பாத்தியா..?”
” இல்ல.. ஏன்டா..?”
” சும்மாதான்..”
சிரித்தபடி சொன்னான் ராமு ”காலைல மெசேஜ் பண்ணியிருந்தா.. ஐ மிஸ் யூ.. அப்படி இப்படினு..”
”ஓ..”அவனோடு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்த போதே.. குமுதாவின் கணவன்.. வீட்டுக்கு வந்து விட்டான்.
”என்னடா..உங்க மச்சான் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாரு..?” என்று கேட்டான் ராமு.
”தெரியல.. ஏதாவது ஜோலியா இருக்கும்..” என்றான்.
அடுத்த கால்மணி நேரத்தில்.. குமுதா அவனுக்கு போன் செய்தாள்.
எடுத்து ”என்ன..?” என்று கேட்டான்
”எங்கடா இருக்க..?”
”கீழதான்..! ஏன்..?”
”மேல வா..”
”ஏன்.. என்னாச்சு..?”
”எங்க மாமியாக்கு ஒடம்பு சரியில்லாம அட்மிட் பண்ணியிருக்காங்களாம்.. கொஞ்சம் மேல வா..”
”வரேன்..!!” என எழுந்து ராமுவிடம் சொல்லிவிட்டு. மேலே போனான்.
குமுதா புடவை கட்டியிருந்தாள். குழந்தை மதுகூட புது கவுன் அணிந்து தயாராக இருந்தாள்.
குமுதாவின் கணவன் சாப்பிட்டுககொண்டிருந்தான்.
”என்னாச்சு..?” என்று மச்சானைப் பார்த்துக் கேட்டான் சசி.
”தலை சுத்தல்.. வாந்தி.. மயக்கம் போட்டு விழுந்திருக்கு..” சாப்பிட்டுக் கொண்டே சொன்னான்.
” பிரஷ்ஷரா..?”
”ம்.. சுகர்..!!”
குமுதா ”நாங்க இன்னிக்கு நைட் அங்க இருந்துட்டு.. நாளைக்குத்தான்டா வரமுடியும்..! சூர்யா ஸ்கூல்லருந்து நாலரை மணிக்கு வந்துருவான்.. அவன கூட்டிட்டு போய் அம்மாகிட்ட விட்று..! அப்றம் நைட்ல நீ இங்க வந்து படுத்துக்க..” என சசியிடம் ஒரு லிஸ்ட் போட்டாள் ”சாப்பாடு கொழம்பெல்லாம் அப்படியே இருக்கு.. நீ இங்கயே சாப்பிட்டுக்க..”
”இப்ப கெளம்பறீங்களா..?”
” மச்சான் சாப்பிட்டா கெளம்பவேண்டியதுதான்..! நான் எல்லாத்தையும் அம்மாகிட்ட போன்ல சொல்லிட்டேன்.! வீட்ட மட்டும் பத்ரமா பாத்துக்க..” என்றாள்.
”எத்தனை கோடி வெச்சிருக்க.. உன் வீட்ல…?” என்று கிண்டலாகக் கேட்டான் சசி….!!!!!