மான்சிக்காக – பாகம் 57 – மான்சி கதைகள்

sidrஅவனின் குழந்தைத்தனமான பேச்சை ரசித்தபடி “ சாப்பாடும் ரெடி பண்றேன் இருந்து சாப்பிட்டு போங்க” என்றாள்.. “ என்னது? சாப்பிட்டு போகனுமா?” என்று முகத்தில் திகைப்புக் காட்டினான் வீரேன்.. “ பின்னே போகாம இங்கேயே குடித்தனமா பண்ணப்போறீங்க…

சார் சாப்பிட்டு இடத்தை காலிப் பண்ணுங்க சார்” என்று கிண்டலாக கூறினாள் ஜோயல்… “ இல்ல ருத்ரா சாப்பிட்டு கொஞ்சநேரம் பேசிகிட்டு இருந்துட்டு நைட்டு உன்கூடவே ஆஸ்பிட்டல்க்கு வர்றேன்… மறுபடியும் நாளைக்கு காலையில உன்கூடவே வீட்டுக்கு வர்றேன்” என்றுவீரேன் கெஞ்சினான்..



“ அது சரி… உங்க தங்கச்சி இருக்கிற வரைக்கும் இது சரி? அதுக்குப்பிறகு நீங்க ஊருக்குப் போயிடுவீங்களே?” என்று வருத்தமாக ஜோயல் சொன்னதும்… அவளைப் பின்புறமாக அணைத்த வீரேன் நீயில்லாம போகமாட்டேன் ருத்ரா.. நான் போகும்போது நீயும் வந்துடு” என்று மெல்லிய குரலில் சொன்னாலும் அந்த குரலில் காதலும் அதற்கான உறுதியும் இருந்தது…

ஜோயல் அமைதியாக இருந்தாள்… காபியை இரண்டு கப் களில் ஊற்றிக்கொண்டு “ வாங்க ஹால்ல போய் பேசலாம்” என்று அவனிடமிருந்து விலகி ஹாலுக்கு வந்தாள்.. அவள் கொடுத்து காபியை வாங்கிக்கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான் வீரேன்… இருவரும் காபி குடித்து முடிக்கும் வரை பேசவில்லை.. காலி கப்புகளை எடுத்துபோய் வைத்துவிட்டு வந்த ஜோயல் அவனுக்கு எதிரேயிருந்த சோபாவில் அமர..

வீரேன் பட்டென்று எழுந்து தயக்கமின்றி அவள் அருகில் போய் அமர்ந்து அவள் கையைப் பற்றி “ என்ன ருத்ரா பேச்சையே காணோம்? என்கூட வரவ தானே?” என்று கூர்மையுடன் கேட்க … “ வீரேன் நான் யாருமில்லாத அனாதை வீரேன்” மெல்லிய குரலில் கூறினாள் ஜோயல்.. அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு “ இனிமே அப்படி சொல்லதே… அதான் நானும் என் குடும்பமும் இருக்கோமே? இனிமே நீ தர்மலிங்கம் மீனாவோட மூத்த மருமகள்..” என்று காதலில் தோய்ந்து வந்து விழுந்தது வீரேனின் வார்த்தைகள்…



“ நான் உங்க அளவுக்கு வசதியில்லை வீரேன்… டாக்டர் எனகிற பட்டத்தை தவிர வேற எதுவுமே இல்லை” ஜோயலின் குரல் உறுதியுடன் ஒலித்தது “ அதான் எங்ககிட்ட நிறைய பணம் இருக்கே… அதுவுமில்லாம எங்க அப்பா அம்மா பணத்தை மதிக்கிறவங்க இல்லை… நல்ல குணத்தை மதிக்கிறவங்க…

அந்த நல்ல குணம் உன்கிட்ட நிறைய இருக்கு ருத்ரா அதுபோதும் எனக்கு” என்றான் வீரேன் அவன் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்தவள் “ நான் சொல்றதை முழுசா கேளுங்க வீரேன்… நான் பிறப்பால் ஒரு இந்து பொண்ணுதான் … புதுக்கோட்டை பக்கத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊர்.. ரொம்ப வசதி கிடையாது.. தினமும் சம்பாதிக்கிறதை வச்சு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்கம்தான் நாங்க.. எனக்கு பத்து வயசா இருக்கும்போது என் அம்மா அப்பா ஒரு பஸ் விபத்துல இறந்து போய்ட்டாங்க…

See also  மான்சிக்காக - பாகம் 21 - மான்சி கதைகள்

அதுக்கப்புறம் என் சொந்தகாரங்க யாருமே என்னை வளர்க்க முன் வரலை.. எல்லாருமா சேர்ந்து மதுரையிலிருந்த ஒரு கிறிஸ்தவ மிஷன்ல என்னை சேர்த்துட்டு போய்ட்டாங்க… ” அவங்க எனக்கு ஞானஸ்நானம் பண்ணி ஜோயல்னு பெயர் வச்சு கிறிஸ்தவ மதத்துல இணைச்சிட்டாங்க… பத்து வயசுலேர்ந்து அங்கதான் வளர்ந்தேன்… ப்ளஸ்டூல நல்ல மார்க் வாங்கியதும் சில ஸ்பான்ஸர்கள் மூலமா எனக்கு டாக்டர் படிக்க சீட் கிடைச்சது…



இருபத்தியொரு வயசுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்துல யாரையும் வச்சுக்க மாட்டாங்க என்பதால் நான் படிச்சு முடிச்சதும் வெளியே வந்துட்டேன்.. ஆனா நான் என் வருமானத்துல அங்கே வளரும் ஆதரவற்ற ஐந்து பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன்.. இப்பதான் எட்டாம் வகுப்பு படிக்கிறாங்க ஐந்து பேரும்… அவங்க என்னை மாதிரி சொந்தகாலில் நிற்கும் வரைக்கும் அவங்க பொருப்புகள் என்னோடதுதான் வீரேன்…. இதுதான் நான்….

இப்ப சொல்லுங்க நான் உங்க குடும்பத்துக்கு சரியா வருவேனா? என்னை இப்படியே உங்கவீட்டுல ஏத்துக்கு வாங்களா? ” ஜோயல் தீர்மானமாக கேட்டாள்…அவள் பேசும்வரை குறுக்கிடாமல் கேட்ட வீரேன் “ என்வீட்டுல நிச்சயமா ஏத்துக்குவாங்க… அப்படி யாராவது ஏதாவது சொன்னா என் மாமா இருக்கார் அவர் பார்த்துக்குவார் ருத்ரா… ஆனா அந்த பசங்களை படிக்க வைக்கிற மேட்டர் தான்……” என்று முடிக்காமல் இழுத்தான் வீரேன்.. ஜோயலின் முகம் பட்டென்று சுருங்கியது…

“ அந்த பிள்ளைகளை அப்படியே விட்டுட்டு நான் வரமுடியாது வீரேன்” என்றாள். உறுதியுடன்… அவள் முகத்தையே காதலாகப் பார்த்த வீரேன்.. விலகி அமர்ந்த அவளை இழுத்து தன் நெஞ்சில்ப் போட்டுக்கொண்டு “ உன்னை நினைச்சாப் பெருமையா இருக்கு ருத்ரா… ஆனா நான் சொல்றதுக்குள்ள முந்திக்கிறயே” என்று அவள் தாடையை தடவியவன்



“ நீ தனியா சம்பாதிச்சு நீயே அஞ்சு பசங்களை படிக்க வைக்கும் போது இவ்வளவு சொத்து இருக்கிற நாம ஏன் இன்னும் பத்து பிள்ளைகளை சேர்த்து படிக்கவைக்க கூடாதுன்னு சொல்ல வந்தேன் ருத்ரா” என்று வீரேன் சொல்லி முடித்த அடுத்த விநாடி அவன் முகத்தில் இருந்த எல்லா இடத்திலும் ஜோயலின் இதழ்கள் தன் தடத்தைப் பதித்தன… இவ்வளவு முத்தத்தை எதிர்பார்க்காத வீரேன் முதலில் திணறி…

பிறகு ஜோயலின் காதல் அச்சாரத்தை ஏற்றுக்கொண்டு… சற்றுநேரத்தில் இருமடங்காக அவளுக்கு பதில் செய்தான்.. மெல்ல தளர்ந்தவளை மென்மையாய் சோபாவில் சரித்து இவன் அவள்மீது வன்மையாய் படர்ந்து இடைவெளியின்றி முத்தமிடுதலை தொடர்ந்தான் மேலோட்டமாக முகத்தில் கொடுத்தவன் அவள் கண்கள் கிறக்கமாக மூடிக்கொண்டதும் பட்டென்று அவள் உதடுகளை கவ்விக்கொண்டான்…

See also  பொம்மலாட்டம் - பாகம் 21 - மான்சி தொடர் கதைகள்

தன் நாவை அவள் வாயினுள் அனுப்பி தேனூற்றை தேடினான், இவன் நாக்கு உள்ளே சுழன்றதும் தேன் தானகவே சுரக்க ஆரம்பிக்க அதை உற்சாகமாய் உறிஞ்சினான்… கொடுத்த அவன் களைத்துப் போகவில்லை என்றாலும் வாங்கிய ஜோயல் களைத்துப்போனாள்…அவன் உடல் பாரத்தை சுமக்க முடியாமல் அவன் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளினாள்…



வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்தவனைப் பார்த்து வெட்கமாய் சிரித்து “ யப்பா பயங்கர முரடு” என்றாள் ஜோயல்… சோபாவுக்கு அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்து “ வெறும் முத்தத்துக்கே முரடன் பட்டமா? அப்போ இன்னும் எவ்வளவோ இருக்கே அதையெல்லாம் எப்படி தாங்குவ ருத்ரா?” என்று ரகசியம் போல வீரேன் கேட்க… அவன் கழுத்தை கைகளால் வளைத்து தன் மார்பில் புதைத்த ஜோயல்

“ ம்ம் அதெல்லாம் தாங்குவேன்… இந்த முரட்டுப்பயலை என்னால அடக்கமுடியும்னு நம்பிக்கை இருக்கு…

ஏன்னா அவன் மனசு குழந்தை மாதிரின்னு எனக்கு தெரியும்” என்று காதல் பேசினாள் .. அவள் மார்புகளை தன் முகத்தால் தேய்த்து அதன் மென்மையை உணர்ந்தபடி “ இவ்வளவு பெரிச எப்படி அந்த வெள்ளை கோட்டுக்குள்ள மறைச்சு வச்ச?” என்று குறும்பாய் கேட்டவன் முகத்தை விலக்கி தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள்

Leave a Comment

error: read more !!