சசியிடம் காபியை எடுத்துக் கொடுத்தாள் புவி..!! அவளது முகத்தில் விழுந்து புரண்ட முன் நெற்றி முடிகளை ஓரமாக தள்ளி விட்டுக் கொண்டு பொதுவாகக் கேட்டாள்.
” ரெண்டு பேரும் ஏதோ.. தீவிரமா டிஸ்கஷ் பண்ணிக்கறிங்க போலருக்கு.. ??”
” ம்.. ம்ம். . !!”
உதட்டில் லேசான குறுநகை தவழ.. காபியை வாங்கிக் கொண்டு.. ஒரு காலை மடக்கி சோபாவில் வைத்துக் கொண்டான்.!
” எதைப் பத்தி.. ??”
” அது.. வேற.. !!”
கவிதாயினி ஒரு காபி கப்பை எடுத்துக் கொள்ள.. புவியும் ஒன்றை எடுத்துக் கொண்டு.. கவியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
” நம்ம மேட்டர் சொல்லிட்டிங்களா.. ??” சசியைப் பார்த்துக் கேட்டாள் புவி.
” ம்கூம்.. !! நாங்க வேற பேசிட்டிருந்தோம்.. !!”
கவிடைப் பார்த்துக் கொண்டு சொன்னான் சசி. ஆவி பறக்கும் காபியை கொஞ்சமாக உறிஞ்சினான்.
” என்னடி.. ??” புவியைப் பார்த்தாள் கவி.
” நீங்களே சொல்லிருங்க.. !!” அக்காளிடம் சொல்வதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு.. சசியிடம் சொன்னாள் புவி.
சசியைப் பார்த்தாள் கவி.
” என்னடா மாமு.. ??”
” நாம இவ்வளவு நேரம் பேசினமே… அது சம்பந்தமானதுதான்.. !!” என்றான்.
” என்ன.. ??”
” புவி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறா.. !!” என மிகவும் இயல்பாகச் சொன்னான்.
” யாரை.. ??”
” அது.. அவளையே கேளு.. !! உன் பக்கத்துலதான இருக்கா…!!”
சட்டென தங்கை பக்கம் திரும்பினாள் கவி. தங்கையைப் பார்த்துக் கேட்டாள்.
” யாரைடி.. ?? லவ் பண்ணிட்டு இருக்கியா. ??”
” ம்.. ம்ம்.. !!” காபியை பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினாள் புவி.
” யாரை.. ??” கவி மீண்டும் ஒரு வியப்புடன் புவியைப் பார்க்க.. புவி மெதுவாக தனது வலது கையை தூக்கி.. சசியை நோக்கி நீட்டினாள்..!!
கவி நம்ப முடியாமல் வாயைப் பிளந்தாள்.!! தனக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல.. காபியை உறிஞ்சியபடி டிவியைப் பார்த்துக் கொண்டு.. உட்கார்ந்திருந்தான் சசி.
” இவனைய்யா.. ??”
” ம்..ம்ம்.. !! நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்.. !!”
” என்னது.. ??” அதிர்ச்சியில்.. கவி காபியை சிந்தி விடுவாள் போல் இருந்தது. ”நெஜமாவா.. ??”
” மெதுவா.. மெதுவா.. !! ஒரு வயித்து புள்ளைத்தாச்சி இப்படி எல்லாம் ஷாக் ஆகககூடாது.. !! இட்ஸ் டேஞ்சரஸ்.. யூ நோ.. ??”
என காபியைக் குடித்துக் கொண்டெ கூலாகச் சொன்னான் சசி.
” அடப்…பன்னாடை.. !! அப்ப நாம இவ்வளவு நேரம் பேசினது.. ?? நீ ஏதோ ஸ்வர்ணமால்யா.. டீச்சர் அப்படி இப்படினு கதை விட்டது.. ??”
” ஹ்ஹா.. !! லூசு.. அதான் நீயே சொல்லிட்டியே கதை விட்டதுன்னு.. !!” எனச் சிரித்தான்.
கவி அவனை முறைத்த முறைப்பில்.. அவள் கையில் இருந்த காபியை தூக்கி அவன் முகத்தில் ஊற்றி விடுவாளோ.. என லேசாக பயந்தான் சசி..!!
அந்த விசயத்தை உள்வாங்கி ஜீரணிக்க.. கவிக்கு கொஞ்ச நேரம் ஆனது. அதுவரை அவள் காபியை குடிக்கவில்லை. அப்பறம்.. எல்லாம் புரிந்து போனதாக இயல்பாகி.. புவியைக் கேட்டாள்..!!
” சீரியஸாவாடி சொல்ற.. ??”
” ம்.. ம்ம்.. !! ரெண்டு பேருமே உக்காந்துருக்கோம். இதுல போய் பொய் சொல்வனா.. ??” என உள் அமுங்கிய குரலில்.. லேசான வெட்கம் படரச் சொன்னாள்.
” அவனை நம்ப முடியாது.. !! அதான் கேக்கறேன்.. !! இவ்வளவு நேரம் அவன் என்ன கதை விட்டுட்டு இருந்தான் தெரியுமா என்கிட்ட.. ??”
” என்ன.. ??”
” அவனுக்கு ஏதோ பொண்ணு பாத்துருக்குன்னான். அதுக்கு என்னை கூப்பிட வந்துருக்கேன்னு சொன்னான். அவ ஒரு டீச்சர்னு புளுகினான்..!! அவன் சொன்னதை நானும் நம்பிட்டேன். கேனச் சிறுக்கி மாதிரி.. !!”
புவி சிரித்தாள்.
” உங்களுக்குள்ள இந்த மாதிரி கலாய்ச்சுக்கறது புதுசா என்ன.. ??”
காபிக்கு பின்.. அவன் முன்பாக எழுந்து நின்ற கவி.. அவன் இரண்டு தோள்களிலும் மாறி மாறி அடித்தாள்.
” பிராடு.. பிராடு.. !! நம்பற மாதிரி சொல்லி என்னை ஏமாத்திட்டியேடா.. !! இதுல வேற.. தத்துவம்லாம் பேசினேன்.. !!”
சிரித்த சசி அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
” பீ கூல்டி.. !! இதுல நீ பீல் பண்ணிக்க ஒண்ணுமே இல்ல.. !!”
” நா எதுக்குடா பீல் பண்றேன்…? இன்னும் சொல்லப் போனா.. இதுல சந்தோசம்தான் எனக்கு.. !!”
” ஓகே.. !! அப்பறம் இந்த மேட்டர்.. இப்பவரை வேற யாருக்கும் தெரியாது..!! மொத மொத.. உன்கிட்டத்தான் சொல்றோம்.. !! என்ன ஓகே வா..?? உடனே ஊதி பெருசு பண்ணிடாம.. இவ படிச்சு முடிக்கறவரை வெய்ட் பண்ணு.. !! அப்பறம் நாங்க மேரேஜ் பண்ணிக்கறோம்.. !!”